ஞாயிறு, டிசம்பர் 06, 2009

கொஞ்சம் சொல்லுங்களேன்......இதுதான் காதலா.....




அன்பு நண்பர்களே,

சில நாட்களாக என்னால் பதிவுகள் இட முடியவில்லை ஏனென்றால்,



"நான் காதலில் விழுந்து விட்டேன்.....என்னையே நான் மறந்து விட்டேன். எதோ ஒரு தனி உலகத்தில் வாழ்வதாக உணர்கிறேன்"

என் காதுகள் மற்றவர் பேச்சைக் கேட்கும் திறன் இழந்துவிட்டது, எப்போதும் அவளுடைய வார்த்தைகள் தான் ஒலிக்கின்றன,

என் கண்களின் பேராசையால்(அவளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம் என் மனத்திரையில்)....சாலையை கடக்கிறேன் ஒரு குருடனைப் போல், .

உலகமே அழகாகிவிட்டது.......என்னோடு அவளில்லாத நாட்களை தவிர ,

தனிமையை விரும்புகிறேன்........துடிக்கின்றது என் மனம் அவளின் வார்த்தையை கேட்க தினம்,

என்னோடு அவளிலாத நாட்கள் அது என்னை விரும்பும் போதும்... நான் அதை வேறுகிறேன்,

வேறொரு உலகம் செய்து அவளோடு அங்கு வாழ நினைகிறேன்,என் இயலாமையை கண்டு அழுகிறேன் (ஏனென்றால் நான் கடவுள் இல்லையே),

சிந்தனை செய்ய மறுக்கிறது என் மனம்.....ஏனென்றால் அவள் மட்டுமே என்னுள்...

சுனாம்யின் தாக்கத்தையே எதிர்கொண்ட நான்,என் காதலின் ஏக்கத்தை எதிர்கொள்ள முடியவில்லை,

சிறகடித்து சந்தோஷமாய் பரந்த என்னை......சிறகொடித்து அவளின் சிறகுகளில் பறக்கச் சொல்கிறாள்....அவ்வப்போது அந்தரத்தில் அதனை பிடுங்கியும் கொ(ல்)ள்கிறாள்,

தனிமையில் பேசுகிறேன், உணவும், உறக்கமும் பறிபோயிற்று....அவள் என்னை நேசிக்கும் பொழுது இந்த உலகமே என்னை நேசிப்பதாக உணர்கிறேன்...

என்னுள் இனம் புரியாத சிந்தனையையும் ......இதயத்தில் சுகமான வலிகளையும் சுமந்து வாழ்கிறேன் ..... அவளோடு வாழப்போகும் அந்த நாட்களுக்காக...



கொஞ்சம்  சொல்லுங்களேன்......இதுதான் காதலா.....

7 கருத்துகள்:

  1. பெயரில்லா6 டிச., 2009, PM 2:17:00

    If u marry it will be opposite ...

    பதிலளிநீக்கு
  2. பாத்து தலைவரே,

    உங்க மனைவி வலைப் பக்கம் தலைக் காட்டப் போறாங்க....உங்க நெலம புரியுது

    பதிலளிநீக்கு
  3. யப்பே...

    ஏனப்பு காதலிகிட்ட இருக்குறத விட்டுட்டு வலைப்பக்கம் வந்துட்டு..போங்க போங்க போய் காதலின் அருமையை உணருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. ஃபாலோவர் விட்ஜெட் சேத்துவிட்டுடுங்க...

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு ரொம்ப நன்றி வசந்த், விட்ஜெட்-ஐ சேர்த்துவிட்டேன்,

    பதிலளிநீக்கு
  6. நண்பா,
    ஒரு பழைய பஞ்ச் ஆனா அது எல்லாருக்கும் பொருந்தும். " எப்பேர்பட்ட காயத்துக்கும் காலம் என்ற மருந்து இருக்கு"
    காலம் கடக்கும் போது எல்லாம் கை கூடும். ஆகவே, தாங்களின் கவனத்தை சிதற விடாமல் கடமையை செலுத்துங்கள். காலத்தை கடந்த பின் இமாலய வெற்றி அடைந்தது போல உணர்வீர்கள்.
    நாங்க சொல்றது கூட உங்களுக்கு செவுடன் காதுல ஊதுற சங்கு மாதிரி இருக்கும். ஏன நீங்க தான் காதல்ல விளுந்துடீங்களே!
    என் எழுத்தில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். யதார்த்தை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டேன்,அவ்ளோதான் நண்பா!
    தங்களின் காதல் எண்ணங்கள்,ஏக்கங்கள் மிக விரைவில் ஈடேற என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    பில்லா

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி பில்லா, உங்களை போன்ற உண்மையான நண்பர்கள் எனக்கு இருக்கும் வரை வெற்றியும் என்னோடு தான்

    பதிலளிநீக்கு