ஞாயிறு, நவம்பர் 22, 2009

கல்யாணம்ன்னு பண்ணா அது காதல் கல்யாணம் தான் ...



ரொம்ப நாளா என்னகொரு ஆசை, கல்யாணம் -ன்னு பண்ணா, எதாவது ஒரு பிகர லவ்  பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு...அது அம்சமான பிகரா இருந்தாலும் சரி, அட்ட பிகரா இருந்தாலும் சரி ஆனா நானும் வயசுக்கு வந்ததுல இருந்து...நல்ல ஒரு பெண்ணை  தேடிகிட்டிருக்கன்....ஒன்னு கூட மாட்டல ..அப்படியே எதாவது ஒரு பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இருந்தா... நாளைக்கு ப்ரொபோஸ் பண்ணலாம்னு போனா  அதுக்குள்ள வேற எவனாவது பிக்கப் பண்ணிடரானுங்க.இப்படி இருகச்ச அப்பதான் அவ வந்தா என்  வாழ்க்கைல(ஆமா பெரிய காக்க காக்க சூரியான்னு நெனப்பு ன்னு நீங்க சொல்றது கேக்குது) , அவ பேரு...புஷ்பா அவ தேவத மாதிரி என் வாழ்கைகுள்ள வந்தா, ரெண்டு பேரும் ஆறு மாசமா சின்சியரா லவ்ப்  பண்ணோம்,என் வழ்க்கை- ல எல்லாமே மாறிப்போச்சி,எல்லா காதலர்களுக்கும் வரும் அதே மன நோய் எனக்கும் வந்துடுச்சி...அதாங்க சாப்ட புடிக்காது ...தூக்கம் வராது...எதப் பாத்தாலும் கவித சொல்லதொனும்...இப்படி இருகச்ச ஒரு நாள் அந்த தேவதைக்கு கல்யாணம் ன்னு சொல்லிக் கழட்டிக்கினு போயிட்டா...அப்பறம் என்ன  காதல் தோல்வி -ல கண்ணீரோடு எல்லாரும் செய்யற  தண்ணி, தாடி, தாம்பு கயிறு இத எல்லாம் செய்யாம..."தோல்வியில் துவண்டு விடாதே ..மீண்டும் முயற்சி செய்ன்னு" ...யாரோ பெரியவங்க சொன்ன வார்த்தைய மனசுல வச்சிக்கிட்டு, அடுத்த பிகருக்கு ட்ரை பண்னேன் .... இதே போல ஸ்கூல் படிக்கச்ச சின்னபுள்ள தனமா  நான் லவ்பண்ண சைன்சு டீச்சருக்கு ரொம்ப நாளா கல்யாணமே ஆகாம இருந்துச்சி ஆனா நான் லாவ்ப் பண்ண ஆரம்பிச்சி ஆறு மாசத்துல அவங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி அப்ப அந்த வலி எனக்கு பெருசா தெரியல, இது போன்ற சின்ன..சின்ன தோல்விகளை அன்னைக்கி  தங்கிகிட்டதாலத் தான் இன்னைக்கி இவ்ளோ பெரிய காதல் தோல்வியிலும் மறுபடியும் ட்ரை பண்ற அளவுக்கு மனசு ஸ்ட்ராங் ஆயிடுச்சி. சரி விஷயத்துக்கு வருவோம், அதுக்கப்புறம் இன்னொரு பிகரும் கெடச்சா ...ரெண்டுப் பெரும் எண்ணி நாலு மாசம் கூட லாவ்ப் பண்ணல, அதுக்குள்ள கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சி, கடைசியா அவல பீச்-ல பாத்தேன், "சாரி பப்பு என்னோட அப்பா ,அம்மாவை மீறி என்னால எதுவும் பண்ணமுடியாது" ன்னு சொல்லிட்டா  அதுமட்டுமில்லாம  அவளோட கல்யாணத்துக்கு கண்டிப்பா நான் வரணுமாம், பத்திரிக்க குடுத்து இருக்க.....அப்பறம் தான் தெரிஞ்சது அவளளுக்கும் ரொம்ப நாளா மாப்ள கிடைக்காம இருந்தது, இந்த விஷயத்த கேட்டு ரொம்ப ஒடஞ்சி போய்ட்டேன். நான் லவ்ப் பண்ணற பொண்ணுகளுக்கெல்லாம் உடனே  கல்யாணம் ஆயிடுத்தே....இது என்னோட தப்பா  இல்ல எனக்கு எதிராக  கடவுளோட சூழ்ச்சியா தெரியல. இத பத்தி என்னோட  பிரண்டுங்க கிட்ட சொல்லி ரொம்ப பீல் பண்ணேன், என்னோட பிரண்டு குமார் சொன்னான் ஆறுதலாய்  "நீ யாண்ட இவ்ளோ பீல் பண்ற விடு மச்சி, இவ இல்லன்னா ஊர்ல வேற பிகரே இல்லையா",  ரகு பக்கத்துல வந்து என் தொள்ள கைப் போட்டுக்கிட்டு " மச்சான் எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு  இருக்கா, அவளுக்கு ரொம்ப நாளா கல்யாணம் ஆகல......." - ன்னு இழுத்தான்.... "நீ கொஞ்சம் அவள லவ்ப் பண்ணு மச்சி" என்றான் செம கடுப்பாயிடுச்சி.
எல்லாரும் விழுந்து... விழுந்து... சிரிக்க ஆரம்பிச்சிட்டானுங்க..ஆ..ஆஹா... இதுக்கு மேல இங்க இருந்தா இவனுங்க போதைக்கி நாம ஊறுகா  ஆயிடுவோம் ன்னு, ஒரு கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுதுட்டன், அடுத்த நாள் மீண்டும் ஆரம்பமானது என் தேடுதல்.....






இன்னும் நான் முயற்சியில் ....







 தத்துவம் மச்சி தத்துவம்  

"முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை "

10 கருத்துகள்:

  1. உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.........
    உங்கள் பதிவு அருமை .......
    தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  2. பார்த்து நண்பா...ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம இருக்குற பொண்ணுக உங்களை தேடி வந்துரப்போறாங்க...:-)

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நண்ரே...

    பதிலளிநீக்கு
  4. நண்பர் உளவு.காம் அவர்களே,

    வருகைக்கும்,பின்னூடத்திற்கும் நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  5. மறுபடியுமா..ஆ....ஆ....ஆ..

    ரோஸ்விக்,
    வருகைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  6. நன்றி குணசீலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா1 டிச., 2009, PM 4:19:00

    Try your best.Leave the rest to God.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா10 டிச., 2009, PM 7:27:00

    அன்பு நண்பரெ வணக்கம், என் பெயர் சுரெஸ். உங்கள் வலைப்பு நன்றாக உள்ளது. ஒரு சந்தேகம் உங்கள் தளத்திலிருந்து வேரொரு தளத்திற்க்கு எப்படி இணைப்பு கொடுக்கிறிர்கள் என்பதை கூறவும் , நான் 10வது வரை மட்டுமெ படித்துள்ளதால் இது பற்றி சரியாக தெரியவில்லை. ss5nts007.asian1037@gmail.com

    பதிலளிநீக்கு