செவ்வாய், நவம்பர் 10, 2009
இந்தியாவிலேயே மிக சிறந்த மனிதரும், தலைவருமான அய்யா Dr.APJ அப்துல்கலாம
தமிழ் நெஞ்சங்கங்களே, நூறு கோடி இந்திய மக்களுக்கு கடவுள் கொடுத்த மிக பெரிய பரிசு அய்யா Dr.APJ அப்துல்கலாம் அவர்கள். இதை யாரும் மறுக்க முடியாது, பல இன்னல்களுக்கும் மத்தியில் படித்து முன்னறிய பண்பாளர் அவர், நம் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தன் வாழ்கையை அர்ப்பணித்த அவர், சொல்லும் அளவிற்கு தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் எதையும் செய்து கொள்ளவில்லை.அவர் ஜனாதிபதியாக இருந்த பொழுது, இந்திய ஜனாதிபதிகளிலேயே பதவிக்காலம் முடிந்ததும் வெறும் இரண்டு பெட்டிகளோடு(துணிமணிகள் அடங்கிய) ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய மகான். ஜனாதிபதியின் குடும்பத்தார்க்கு சலுகைகள் பல இருந்தும், ஒவ்வொரு முறையும் தன்னுடைய வருமானத்திலிருந்து எடுத்து செலவு செய்தவர். இந்திய மக்கள்தான் என் குடும்பம்,அவர்களை கரை சேர்ப்பது என் கடமை ,அவர்களுக்காக வாழும் வாழ்கையை நினைத்து பெருமை கொள்ளும் புனிதர் இவர். உண்மையை சொன்னால்....பொதுவாக அழுகடைந்த நீரில் மீனை விட்டால் அழுக்குகளை அகற்றி சுத்தமான நீராக்கிவிடும், அதுபோல நம்நாட்டில் அரசியலை சாக்கடைக்கு ஒப்பிடுவார்கள்,அந்த மாசு படிந்த அரசியலை சுத்தமானதாக மாற்றிக்கொண்டிருக்கும் பொழுது அவரையே மாற்றிவிட்டார்கள். அந்த மாமனிதரும் அரசியல் வாதிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகியது தான் கொடுமை.....இந்த அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டார்களா? நம் நாட்டில் பல இளைஞர்களின் எதிர்பார்ப்பும்,ஏக்கமும் அவர் மீண்டும் தலைவராக மாட்டாரா? என்பது தான். அவரின் கனவு 2020-ல் இந்தியா வல்லரசு ஆகும், இந்தியா மக்களில் கஷ்டங்கள் தீரும், உலக நாடுகளுக்கிடே இந்தியா தலை நிமிர்ந்து நடக்கும் என்று, என்னை கேட்டால் அவர் மீண்டும் ஒருமுறை தலைமை பொறுப்பேற்றால்,நம் நாடு அடுத்த 5 வருடங்களில் வல்லரசு ஆவது உறுதி.
குறிப்பு : Dr. அப்துல்கலாமின் புத்தகங்கள் வேண்டுமென்றால், எனக்கு மெயில் செய்யவும் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் இடவும்.
SRM
நன்றி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மிகச் சிறந்த அறிஞர் மட்டுமல்ல அவர் உன்னதமான மனிதர்.
பதிலளிநீக்குஅனுப்பி விடுங்க அந்த புத்தகங்களை. - thisaikaati@gmail.com
send me the great man books
பதிலளிநீக்குabdumal@gmail.com
திரு. அப்துல் கலாம் ஐயாவைப் பற்றி அறிய ஆசையாக உள்ளது. எனது மின்னஞ்சலிற்கு அனுப்பி விடவும். நன்றி.
பதிலளிநீக்குemail: mayavee6@yahoo.com
Advance Thanks
பதிலளிநீக்குஅறிஞர் திரு.அப்துல் கலாம் அவர்கள் புத்தகங்களை
எனக்கும் அனுப்பி வைக்கவும்...
rddhina@yahoo.co.in